உலகெங்கும் வாழும் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் எமது இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
உலகம் போகிற போக்கில தான்
முன்னேறுவது நாங்களா தமிழா!
பலப்பல நுட்பங்கள் தான்
வருவதைத் தான் பாரு தமிழா!
தமிழ்மொழி வாழத் தான்
நுட்பங்கள் தான் உதவுமா தமிழா!
பேசுகின்ற மொழிகள் தான்
அடுத்தடுத்து அழிகிறதே தமிழா!
தேன்தமிழ் மொழி கூட
வலுவிழப்பதைப் பாரு தமிழா!
தாய்மொழி வாழத் தான்
இலக்கியம் வாழவும் வேணும் தமிழா!
பிள்ளையைப் பெற்றால் கூட
தமிழூட்டி வளர்க்கவும் வேணும் தமிழா!
இளசுகளுக்கு மொழிப்பற்றுத் தான்
நெஞ்சிலே ஊறவும் வேணும் தமிழா!
உலகெங்கும் இளசுகள் தானே
இலக்கியம் பரப்பவும் வேணும் தமிழா!
தமிழுலகம் மலரத் தானே
மொழிவளம் பேணவும் வேணும் தமிழா!
30 ஆண்டுகளுக்கு முன்
(இப்ப எனக்கு 50)
நான்
காதலிக்க நினைத்த எவரையும்
என்னால் காதலிக்க முடியவில்லை…
எவளோ
என்னைக் காதலிக்க நினைத்தாலும்
அவளால் காதலிக்க முடியவில்லை…
வாழ்வில்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
கடவுளை நினைப்பவர் எவர்?
சிலர் ஒரு தலைக் காதலாக
சொல்லிக் கொள்ளாமல் இணைவதில்லை
சிலர்
காதலைச் சொல்லி இணைந்தாலும்
திருமணம் வரை செல்வதில்லை
சிலர்
திருமணமான பின்னர் காதலிப்பதும்
(நானும் என்னில்லாளும் போல)
வாழ்வில் நிகழ்ந்தே தீரும்
ஆதாலால்,
உள்ளங்கள் உரசுவதால்
ஊற்றெடுக்கும் அன்பால் (காதலால்)
உறவாடும் உறவுகள் எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!
அதுவும்
வலன்டைன் நினைவாய் – எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!
மின்நூல் வெளியீட்டுப் பணிகளில் நானிருந்தாலும் மின்நூல் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் எழுதியிருந்தாலும்
(http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html) நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி….”இலவச தமிழ் மின்னூல்கள்” என்றவாறு வைஷாலி வாசகர் வட்டம் வெளியிட்ட பதிவு எனக்குப் பிடித்திருந்தமையாலும் தங்களுடன் பகிருகிறேன்.