Zoom ஆல தான் எனக்குச் சாவு!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், , ’யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் இணைய வழி நடத்தும் TeamLink ID: 9159510023 PWD: 7101969 மரபுக் கவிதைப் பயிலரங்கம் பள்ளிக்கூட, பல்கலைக்கழக மாணவர்களுடன் பயில விரும்பும் எவரும் எந்நாட்டவரும் ரீம்லிங் செயலி வழி இணையலாம். பயிலரங்க ஆசிரியர்:- முனைவர். .திருஞானசம்பந்தம் ஒவ்வொரு வெள்ளியும் (இல., நேரம்) மாலை 7 மணிக்கு இடம்பெறும். 7.00 மணிக்கு முன்னதாக இணைய வேண்டும். ஒருங்கிணைப்பு: யாழ்பாவாணன் சி.ஜீவலிங்கம்) Mobi: 094 070 3445441 (Whatsapp) email: vazlpayanan@hotmail.com நேரலை: https://w.acebokco/g/pag/Live’ எனச்சொல்லும் உரை

17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்திவருகிறேன். அடுத்த பயிலரங்கம் 21/08/2020 வெள்ளி இடம்பெறும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கெடுக்க உதவுங்கள்.

Zoom ஆல தான் எனக்குச் சாவு!

இப்பவெல்லாம்

இணையக் கலந்துரையாடல் தான்…

Teams என்கிறாங்க… Meet என்கிறாங்க…

அடிக்கடி Zoom என்கிறாங்க…

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கோ

(Data குடிப்பதால்) வருவாய் என்கிறாங்க…

எவரும் எம்மைச் சிந்தித்தார்களோ

எங்களுக்குத் தெரிவதில்லை…

(Covid -19) கொரோனா வந்தபின்

வீட்டுக்காவல் போல முடக்கிவிட

இணையக் கலந்துரையாடல் தான்

ஆற்றுப்படுத்த உதவினாலும் கூட

Zoom ஆல தான் உனக்குச் சாவு என்று

என் பெண்டாட்டி திட்டித் தீர்ப்பதை

கடவுள் தான் கண்டிருப்பார்…

உண்ணாண உண்மை தான்!

மூன்று மணிக்குக் கவிஞர் சந்திப்பு

நான்கு மணிக்குப் பாடகர் சந்திப்பு

ஐந்து மணிக்கு வெளியீட்டாளர் சந்திப்பு

ஆறு மணிக்கு எழுத்தாளர் சந்திப்பு

ஏழு மணிக்கு வாசகர் சந்திப்பு

இப்படியே நீண்டு செல்கிறது…

 நாளுக்கு நாள்

ஓய்வின்றி ஒன்றுக்கு மேற்பட்ட

இணையக் கலந்துரையாடல் தான்…

இதைப் பார்க்கிற பெண்டாட்டி

தன்னைக் கட்டியதை விட

Zoom ஐக் கட்டியிருக்கலாமே என்கிறாள்…

எல்லோரும் தேவை தான்

எல்லாமும் தேவை தான்

Zoom இல தலையைக் காட்டாட்டி

உள்ளத்தில அமைதியில்லை என்போர்க்கு

Zoom ஆல தான் சாவு போல…

எனக்கு இப்ப Zoom ஆஅ

என் பெண்டாட்டியா தேவை?

எனக்கே தலையைச் சுற்றுகிறதே!

யாழ்பாவாணன் ஏன் இப்படி எழுதினார் என்று பலரும் கேட்கலாம். இணையக் கலந்துரையாடல் எனப் பலர் படையெடுக்கின்றனர். அக்கலந்துரையாடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுப் பேணப்பட்டால் நன்மையுண்டு. அதேவேளை குடும்பம் பற்றியும் சிந்திக்க வேண்டுமே! அதனை எண்ணிப் பார்த்தேன்; அதனால் எழுதியதை அப்படியே பகிர்ந்தேன்.

2 Responses

  1. திண்டுக்கல்லாரின் கருத்தினை வழி மொழிகின்றேன்

    Like

Comments are closed.