17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்திவருகிறேன். அடுத்த பயிலரங்கம் 21/08/2020 வெள்ளி இடம்பெறும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கெடுக்க உதவுங்கள்.
Zoom ஆல தான் எனக்குச் சாவு!
இப்பவெல்லாம்
இணையக் கலந்துரையாடல் தான்…
Teams என்கிறாங்க… Meet என்கிறாங்க…
அடிக்கடி Zoom என்கிறாங்க…
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கோ
(Data குடிப்பதால்) வருவாய் என்கிறாங்க…
எவரும் எம்மைச் சிந்தித்தார்களோ
எங்களுக்குத் தெரிவதில்லை…
(Covid -19) கொரோனா வந்தபின்
வீட்டுக்காவல் போல முடக்கிவிட
இணையக் கலந்துரையாடல் தான்
ஆற்றுப்படுத்த உதவினாலும் கூட
Zoom ஆல தான் உனக்குச் சாவு என்று
என் பெண்டாட்டி திட்டித் தீர்ப்பதை
கடவுள் தான் கண்டிருப்பார்…
உண்ணாண உண்மை தான்!
மூன்று மணிக்குக் கவிஞர் சந்திப்பு
நான்கு மணிக்குப் பாடகர் சந்திப்பு
ஐந்து மணிக்கு வெளியீட்டாளர் சந்திப்பு
ஆறு மணிக்கு எழுத்தாளர் சந்திப்பு
ஏழு மணிக்கு வாசகர் சந்திப்பு
இப்படியே நீண்டு செல்கிறது…
நாளுக்கு நாள்
ஓய்வின்றி ஒன்றுக்கு மேற்பட்ட
இணையக் கலந்துரையாடல் தான்…
இதைப் பார்க்கிற பெண்டாட்டி
தன்னைக் கட்டியதை விட
Zoom ஐக் கட்டியிருக்கலாமே என்கிறாள்…
எல்லோரும் தேவை தான்
எல்லாமும் தேவை தான்
Zoom இல தலையைக் காட்டாட்டி
உள்ளத்தில அமைதியில்லை என்போர்க்கு
Zoom ஆல தான் சாவு போல…
எனக்கு இப்ப Zoom ஆஅ
என் பெண்டாட்டியா தேவை?
எனக்கே தலையைச் சுற்றுகிறதே!
யாழ்பாவாணன் ஏன் இப்படி எழுதினார் என்று பலரும் கேட்கலாம். இணையக் கலந்துரையாடல் எனப் பலர் படையெடுக்கின்றனர். அக்கலந்துரையாடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுப் பேணப்பட்டால் நன்மையுண்டு. அதேவேளை குடும்பம் பற்றியும் சிந்திக்க வேண்டுமே! அதனை எண்ணிப் பார்த்தேன்; அதனால் எழுதியதை அப்படியே பகிர்ந்தேன்.
Filed under: வலைப் பதிவுகள் | Tagged: Zoom |
சிரமம் தான்….
LikeLike
திண்டுக்கல்லாரின் கருத்தினை வழி மொழிகின்றேன்
LikeLike